Monday, August 30, 2010

இரண்டாய். . . ஒன்றாய். . . இரண்டாய். . .


நீ நான் என்பது போய் நாம் ஆகியது
எனது உனது போய் நமது ஆகியது
என் உன் போய் நம் ஆகியது . . .

இத்தனையும் ஒன்றாய் இருந்தும்
உன் உலகம் என் உலகம் இரண்டும்
ஒன்றாய் மாறாதது ஏனோ . . .

நாம் ஒன்றாய் காணும் கனவும்
நம் வாழ்வில் நடக்கும் நனவும்
இரண்டாய் வேறுபடுவது ஏனோ . . .

உனக்கென நானும் எனக்கென நீயும்
பார்த்துப் பார்த்து எத்தனை செய்யினும்
அவை மறைந்து போவது ஏனோ . . .