Friday, October 1, 2010

இதனாலோ . . .



கண்ணைத் திறந்தே காணும் கனவுகளும் இதனாலோ
மேலே பறப்பது போல மிதப்பதும் இதனாலோ . . .

நிறைந்த எதிர்பார்ப்பும் ஏக்கமும் இதனாலோ
உரிமை எண்ணம் கூடுவதும் இதனாலோ . . .

மற்ற உறவெல்லாம் தள்ளித் தெரிவதும் இதனாலோ
ஒருவரே உலகமாவதும் இதனாலோ . . .

கோபங்கள் கொந்தளிப்பதும் இதனாலோ
ஆசைகள் அலைபாய்வதும் இதனாலோ . . .

மௌனங்கள் பேசிடுவதும் இதனாலோ
வார்த்தைகள் வற்றிப் போவதும் இதனாலோ . . .

சுவை கூட சுவையற்றுப் போவதும் இதனாலோ
பசி கூட பறந்து போவதும் இதனாலோ . . .

இதனால் இதனால் என்றே சொல்லப்படுவதும்
இந்தக் காதல் எனப்படுவது தானோ . . .