Tuesday, April 20, 2010

இதைத்தான் காதல் என்பதா . . .


என்ன தான் என் மீது நீயும் உன் மீது
நானும் எவ்வளவுதான் கோபப்பட்டாலும்
என்னால் உன்னுடனோ உன்னால் என்னுடனோ
கதைக்காது இருபத்து நான்கு மணிநேரம் கூட
நகர்த்த முடிவதில்லை இயல்பாய்
இதைத்தான் காதல் என்பதா . . .

ஒருவரை ஒருவர் எவ்வளவுதான் திட்டினும்
சிறிது நேரத்தில் யாரோ ஒருவர் இறங்கி வருவது
ஒருவரை ஒருவர் சமாதானப்படுத்துதல்
விதிகள் பல உருவாக்கி கடைப்பிடிக்க முயல்வது
அதே விதிகளை அறிந்தும் அறியாமலும் நாமே மீறிடுதலும்
இதைத்தான் காதல் என்பதா . . .

செல்லப் பெயர்கள் வைத்து அழைப்பதும்
மற்றவரைக் கெஞ்ச வைத்து வீம்பாய் இருத்தல்
இருவரும் அன்பாய்க் கொஞ்சிக் கொள்ளல்
சிரிக்க வைக்க முயன்று ஜெயிப்பதும் தோற்பதும்
ஒற்றுமை எப்படி உள்ளதென்று சதவீதம் பார்த்தலும்
இதைத்தான் காதல் என்பதா . . .

No comments: