Saturday, January 23, 2010

உனக்குத் தெரியுமா . . .


என்னுடைய ஒவ்வொரு நாளும் உன்னோடான
தொலைபேசி உரையாடலில் தான் தொடக்கப்படுகிறது

என் இருபத்து நான்கு மணிநேரமும் உன்னோடான
ஒரு மணி நேர அரட்டையில் தான் அடக்கப்படுகிறது

என்னுடைய நேசத்தின் ஆழம் உன்னோடான
கோபதாபங்களில் தான் தெரியப்படுகிறது

என் உணவு வேளைகள் உன்னோடான
மின்னஞ்சல்களில் தான் சுருக்கப்படுகிறது

என்னுடைய இரவுகள் உன்னோடான
குறுஞ் செய்திகளில் தான் முடிக்கப்படுகிறது

என் கனவுகளின் ஆரம்பம் உன்னோடான
தொலைதூரப் பயணங்களில் தான் காணப்படுகிறது

என்னுடைய பெண்மையின் தன்மை உன்னோடான
பொழுதுகளில் தான் அறியப்படுகிறது

என் இன்பதுன்பத்தின் எல்லைகள் உன்னோடான
பகிர்தலில் தான் அளவிடப்படுகிறது

என்னுடைய வெட்கத்தின் முகவரி உன்னோடான
சந்திப்புகளில் தான் வெளிப்படுகிறது

என் சுவாசத்தின் அடையாளம் உன்னோடான
நெருக்கத்தில் தான் பெறப்படுகிறது

என்னுடைய இதயத்தின் துடிப்பு உன்னோடான
அணைப்பில் தான் உணரப்படுகிறது

என் உயிரின் ஓசை உன்னோடான
முத்தங்களில் தான் கேட்கப்படுகிறது

என்னுடைய காதலின் அர்த்தம் உன்னோடான
வாழ்க்கையில் தான் தீர்மானிக்கப்படவுள்ளது

No comments: