Saturday, May 29, 2010

சொல்லாமலே . . .




நீ சொல்வாயென நானும்
நான் சொல்வேனென நீயும்
சொல்லாமலே விட்டு விடுகிறோம்
நாம் ஒருவரை ஒருவர் காதலிப்பதை
நமக்குள்ளும் பிறரிடமும்
சொல்ல மறந்த கதையாக . . .

Sunday, May 23, 2010

கண்ணீர்


உன்னை நானோ என்னை நீயோ
காயப்படுத்தும் வேளைகளில்
கண்ணில் தானாய் வழிகிறது கண்ணீர்
கட்டுப்பாடின்றி தொடர்ச்சியாய்

பிரிவு




நீயும் நானும் ஒன்றாய் இருந்ததில்லை எப்போதும்
நீ அங்கேயும் நான் இங்கேயுமாய் தான் நம் வாழ்க்கை
இப்போது நீ இன்னும் தொலைவு சென்றதனால்
பிரிவை மிகவும் அதிகமாய் உணர்கிறேன் நான்