Friday, March 4, 2011

நீ வருவாய் என . . .




உன்னைப் பார்க்கப் போகும்
ஏக்கம் என் கண்களில் . . .
உன்னோடான பொழுதுகளின்
நினைவலைகள் என் நெஞ்சில் . . .
உன்னோடு நடை போடுகையில்
சிறு நடுக்கம் என் கால்களில் . . .
உன்னை அணைக்கப் போகும்
ஆரவாரத்தில் என் கைகளில் . . .
உன்னை நினைக்கையில்
மெல்லிய புன்னகை என் இதழ்களில் . . .
இத்தனையும் நீ வருவாய் எனும்
என் இனிய எதிர்பார்ப்பில் . . .