Showing posts with label கனவு. Show all posts
Showing posts with label கனவு. Show all posts

Sunday, June 19, 2011

தூக்கமில்லா இரவுகள் . . .



ஒட்டகத்திற்கு இடம் கொடுத்த கதையாய்
தூக்கத்தில் கனவில் இடம் கேட்பாய் நீ
ஒட்டகம் கூடாரத்தையே பிடித்த கதையாய்
தூக்கமேயின்றி விடிகின்றன என் இரவுகள்
உன் கனவிலும் நினைவிலும் . . .

Sunday, February 27, 2011

என் போராட்டம் . . .



இருண்ட இரவு விடியும் மட்டும்
உன் கனவுகளோடான போராட்டம் . . .

ஒளிரும் பகல் இருளும் மட்டும்
உன் நினைவுகளோடான போராட்டம் . . .

கனவோடும் நினைவோடும் கழியும் என்
நாட்களில் எப்போது தான் வருவாய் நிஜமாய் நீ . . .

Friday, October 1, 2010

இதனாலோ . . .



கண்ணைத் திறந்தே காணும் கனவுகளும் இதனாலோ
மேலே பறப்பது போல மிதப்பதும் இதனாலோ . . .

நிறைந்த எதிர்பார்ப்பும் ஏக்கமும் இதனாலோ
உரிமை எண்ணம் கூடுவதும் இதனாலோ . . .

மற்ற உறவெல்லாம் தள்ளித் தெரிவதும் இதனாலோ
ஒருவரே உலகமாவதும் இதனாலோ . . .

கோபங்கள் கொந்தளிப்பதும் இதனாலோ
ஆசைகள் அலைபாய்வதும் இதனாலோ . . .

மௌனங்கள் பேசிடுவதும் இதனாலோ
வார்த்தைகள் வற்றிப் போவதும் இதனாலோ . . .

சுவை கூட சுவையற்றுப் போவதும் இதனாலோ
பசி கூட பறந்து போவதும் இதனாலோ . . .

இதனால் இதனால் என்றே சொல்லப்படுவதும்
இந்தக் காதல் எனப்படுவது தானோ . . .

Wednesday, July 7, 2010

முதல் சந்திப்பு . . .



இப்போது போலவே இருக்கிறது உனைப் பார்த்தது
நேரம் தான் எத்தனை விரைவாய் ஓடுகிறது . . .
இப்போது நினைத்தாலும் மலர்கிறது
புன்னகை தானே அந் நினைவில் . . .

புகையிரத நிலைய இருக்கையில் நான்
புகையிரதத்தின் உள்ளே - நீ . . .
இன்னும் காணவில்லையே என நானும்
நிறுத்தம் வரவில்லையேயென நீயும் . . .

நெருங்குவதை உணர்ந்த நானோ சுவருக்குப் பின்னே
வெளியேற இலகுவாய் நீயோ கதவருகே . . .
நின்றது புகையிரதம் மட்டுமா
எம் நேரங்களும் தானே . . .

ஆயிரமாயிரம் எதிர்பார்ப்புகளும், ஆசைகளும்
வண்ண வண்ணமாய்க் கனவுகளும் . . .
அத்தனைக்கு மத்தியில் பயமும்
என்ன சொல்லப் போகிறோமொமென நாமும் . . .

என்ன சொல்வதென தெரியாமல்
நாம் இருவரும் திகைத்திட்ட வேளையில் . . .
கண்கள் மட்டுமே பேசிக் கொண்டன
வார்த்தைகளோ வெளிவரவே வெட்கப்பட்டன . . .

நடைபாதை ஓரம் நம் கால்கள் நடை பழக
நம்மிடையே ஒரு ஒதுக்கம் சிறு தயக்கம் . . .
கடைக் கண் பார்வைகள் மட்டும் தாராளமாய்
இருவரிடமிருந்தும் வேக வேகமாய் . . .

உனைக் கிள்ளியதில் எனக்கு வலித்தது
உண்மை உணர்ந்தேன் கனவன்று நிஜமே என்று . . .
முதல் பார்வை, முதல் சந்திப்பு, முதல் ஸ்பரிசம்
எல்லாம் நேருக்கு நேரே கண் முன்னே . . .