Showing posts with label நான். Show all posts
Showing posts with label நான். Show all posts

Thursday, May 1, 2014

சொல்லாமல் விடுபட்டதேனோ . . .


நண்பர்களாய் காதலர்களாய் இருக்கையில்
நீ சொன்ன ஐ லவ்யூக்கள், ஐ மிஸ்யூக்கள்
கல்யாணத்தின் பின் அருகி  -  இன்று
நாம்   கணவன் மனைவியாய் முதன் முதலாக
தொலை தூரத்தில் இருக்கையிலும்
அறவே சொல்லாமல் விடுபட்டதேனோ .  .  .

புரியவில்லை என்னை உனக்கு . . .


காதலிக்கும் போதெல்லாம் நான் என்
மனதில் நினைப்பதெல்லாம் சொன்னாய் நீ . . .
இப்போதோ நான் சொன்னாலுமே கூட
புரியவில்லை என்னை உனக்கு  . . .

Tuesday, March 6, 2012

கை பிடித்தேன் . . .



முழுவதும் கூட இருப்பாய் என்று தான்
என் பெற்றோர் நண்பர்கள் சுற்றத்தவர்கள்
அனைவரையும் விடுத்து உன் கை பிடித்தேன் . . .
நீயோ சிறு சிறு முரண்பாடுகளுக்கு கூட
என் கையை விட்டு விட்டு தனியே
உன் வழியில் செல்வதேனோ . . .

Wednesday, November 16, 2011

எதிர்பார்க்கிறேன் . . .



வேலைக்கு செல்கையில் ஒரு முத்தம்
வேலை விட்டு வந்ததும் சிறு அணைப்பு . . .
அருகருகே நாம் இருக்கையில்
லேசாய் தலை சாய உந்தன் தோள்கள் . . .
காதருகே சில பல கொஞ்சல்கள்
இலகுவாய் கோர்த்தபடி நம் கைகள் . . .
அவ்வப்போது ஐ லவ் யு, ஐ மிஸ் யு
அதிசயிக்க வைக்க பூங்கொத்து . . .
வெளியே இருந்து ஒரு குறுஞ் செய்தி
காதலுடன் ஒரு மின் அஞ்சல் . . .
கணணி, தொலைக்காட்சி, தொலைபேசி அன்றி
நமதேயான சில பொழுதுகள் . . .
இதையெல்லாம் நான் உன்னிடம் எதிர்பார்க்கிறேன் எனச்
சொல்ல நினைத்தேன் பலதடவை கடைசியில்
இங்கே இப்படிச் சொல்லிவிட்டேன் உன்னிடமே . . .

Wednesday, June 22, 2011

உன் நினைவு . . .



குரங்கை நினைக்காமல் மருந்து குடித்த
கதையாகி விட்டது - என் நிலை . . .
தினமும் இரவில் உன்னைப் பற்றி நினைக்காது
தூங்க வேண்டும் என்பது - என் சபதம் . . .
மறுதினம் எழுகையில் எப்போது உன்னை நினைக்கவில்லை
நான் தூங்கி இருக்க என்றாகிறது - என் கதை . . .

Friday, March 4, 2011

நீ வருவாய் என . . .




உன்னைப் பார்க்கப் போகும்
ஏக்கம் என் கண்களில் . . .
உன்னோடான பொழுதுகளின்
நினைவலைகள் என் நெஞ்சில் . . .
உன்னோடு நடை போடுகையில்
சிறு நடுக்கம் என் கால்களில் . . .
உன்னை அணைக்கப் போகும்
ஆரவாரத்தில் என் கைகளில் . . .
உன்னை நினைக்கையில்
மெல்லிய புன்னகை என் இதழ்களில் . . .
இத்தனையும் நீ வருவாய் எனும்
என் இனிய எதிர்பார்ப்பில் . . .

Sunday, February 27, 2011

என் போராட்டம் . . .



இருண்ட இரவு விடியும் மட்டும்
உன் கனவுகளோடான போராட்டம் . . .

ஒளிரும் பகல் இருளும் மட்டும்
உன் நினைவுகளோடான போராட்டம் . . .

கனவோடும் நினைவோடும் கழியும் என்
நாட்களில் எப்போது தான் வருவாய் நிஜமாய் நீ . . .

Saturday, November 13, 2010

நீயும் . . . நானும் . . .


உன்னோடான பொழுதுகள் எதற்காகவேனும்
குறைகையில் உன்னை மிக மிக
அதிகமாக பிரிந்திருப்பதாய் உணர்கிறேன் . . .
இன்னும் எப்படியெல்லாம் உன்னோடான
நேரங்களை அதிகரிக்கலாம் என்றே
கணக்கு போடுகிறது என் மனது . . .
அவை கிடைக்காத போது அந்த தவிப்பானது
கடுங் கோபமாகி விடுகிறது உன் மீதே . . .

உன் வரவு . . .


நேற்றைய இரவு நீ வரப் போகிறாய் என்றதும்
உன் வரவின் போது நாமிருவரும்
என்னவெல்லாம் செய்யலாம் என
திட்டமிட்டது என் மனது சந்தோஷத்தில்
இன்றைய காலை உன் வரவே கேள்விக்குரியானதால்
மொத்தமாய் இருட்டித் தெரிகிறது என் வாழ்வு . . .

Thursday, November 4, 2010

ஐ லவ் யூ . . .



என்னிடம் நீ சொல்லாது விட்ட
ஐ லவ் யூக்களை சேர்த்து வைத்தால் . . .
நாம் சந்திக்கையில் அதையன்றி என்னிடம்
வேறெதுவும் பேச உனக்கு நேரமே கிடைக்காது . . .

Monday, August 30, 2010

இரண்டாய். . . ஒன்றாய். . . இரண்டாய். . .


நீ நான் என்பது போய் நாம் ஆகியது
எனது உனது போய் நமது ஆகியது
என் உன் போய் நம் ஆகியது . . .

இத்தனையும் ஒன்றாய் இருந்தும்
உன் உலகம் என் உலகம் இரண்டும்
ஒன்றாய் மாறாதது ஏனோ . . .

நாம் ஒன்றாய் காணும் கனவும்
நம் வாழ்வில் நடக்கும் நனவும்
இரண்டாய் வேறுபடுவது ஏனோ . . .

உனக்கென நானும் எனக்கென நீயும்
பார்த்துப் பார்த்து எத்தனை செய்யினும்
அவை மறைந்து போவது ஏனோ . . .

Wednesday, July 7, 2010

முதல் சந்திப்பு . . .



இப்போது போலவே இருக்கிறது உனைப் பார்த்தது
நேரம் தான் எத்தனை விரைவாய் ஓடுகிறது . . .
இப்போது நினைத்தாலும் மலர்கிறது
புன்னகை தானே அந் நினைவில் . . .

புகையிரத நிலைய இருக்கையில் நான்
புகையிரதத்தின் உள்ளே - நீ . . .
இன்னும் காணவில்லையே என நானும்
நிறுத்தம் வரவில்லையேயென நீயும் . . .

நெருங்குவதை உணர்ந்த நானோ சுவருக்குப் பின்னே
வெளியேற இலகுவாய் நீயோ கதவருகே . . .
நின்றது புகையிரதம் மட்டுமா
எம் நேரங்களும் தானே . . .

ஆயிரமாயிரம் எதிர்பார்ப்புகளும், ஆசைகளும்
வண்ண வண்ணமாய்க் கனவுகளும் . . .
அத்தனைக்கு மத்தியில் பயமும்
என்ன சொல்லப் போகிறோமொமென நாமும் . . .

என்ன சொல்வதென தெரியாமல்
நாம் இருவரும் திகைத்திட்ட வேளையில் . . .
கண்கள் மட்டுமே பேசிக் கொண்டன
வார்த்தைகளோ வெளிவரவே வெட்கப்பட்டன . . .

நடைபாதை ஓரம் நம் கால்கள் நடை பழக
நம்மிடையே ஒரு ஒதுக்கம் சிறு தயக்கம் . . .
கடைக் கண் பார்வைகள் மட்டும் தாராளமாய்
இருவரிடமிருந்தும் வேக வேகமாய் . . .

உனைக் கிள்ளியதில் எனக்கு வலித்தது
உண்மை உணர்ந்தேன் கனவன்று நிஜமே என்று . . .
முதல் பார்வை, முதல் சந்திப்பு, முதல் ஸ்பரிசம்
எல்லாம் நேருக்கு நேரே கண் முன்னே . . .

Saturday, May 29, 2010

சொல்லாமலே . . .




நீ சொல்வாயென நானும்
நான் சொல்வேனென நீயும்
சொல்லாமலே விட்டு விடுகிறோம்
நாம் ஒருவரை ஒருவர் காதலிப்பதை
நமக்குள்ளும் பிறரிடமும்
சொல்ல மறந்த கதையாக . . .

Sunday, May 23, 2010

கண்ணீர்


உன்னை நானோ என்னை நீயோ
காயப்படுத்தும் வேளைகளில்
கண்ணில் தானாய் வழிகிறது கண்ணீர்
கட்டுப்பாடின்றி தொடர்ச்சியாய்

பிரிவு




நீயும் நானும் ஒன்றாய் இருந்ததில்லை எப்போதும்
நீ அங்கேயும் நான் இங்கேயுமாய் தான் நம் வாழ்க்கை
இப்போது நீ இன்னும் தொலைவு சென்றதனால்
பிரிவை மிகவும் அதிகமாய் உணர்கிறேன் நான்

Tuesday, April 20, 2010

இதைத்தான் காதல் என்பதா . . .


என்ன தான் என் மீது நீயும் உன் மீது
நானும் எவ்வளவுதான் கோபப்பட்டாலும்
என்னால் உன்னுடனோ உன்னால் என்னுடனோ
கதைக்காது இருபத்து நான்கு மணிநேரம் கூட
நகர்த்த முடிவதில்லை இயல்பாய்
இதைத்தான் காதல் என்பதா . . .

ஒருவரை ஒருவர் எவ்வளவுதான் திட்டினும்
சிறிது நேரத்தில் யாரோ ஒருவர் இறங்கி வருவது
ஒருவரை ஒருவர் சமாதானப்படுத்துதல்
விதிகள் பல உருவாக்கி கடைப்பிடிக்க முயல்வது
அதே விதிகளை அறிந்தும் அறியாமலும் நாமே மீறிடுதலும்
இதைத்தான் காதல் என்பதா . . .

செல்லப் பெயர்கள் வைத்து அழைப்பதும்
மற்றவரைக் கெஞ்ச வைத்து வீம்பாய் இருத்தல்
இருவரும் அன்பாய்க் கொஞ்சிக் கொள்ளல்
சிரிக்க வைக்க முயன்று ஜெயிப்பதும் தோற்பதும்
ஒற்றுமை எப்படி உள்ளதென்று சதவீதம் பார்த்தலும்
இதைத்தான் காதல் என்பதா . . .

Sunday, February 14, 2010

காதலர் தினம் . . .


இன்று காதலர் தினமாம் உலகே கொண்டாடுகிறது
நாம் இருவரும் என்ன செய்கிறோம் . . .
நாம் தான் நவீன காதலர்கள்
இருபத்தோராம் நூற்றாண்டில் . . .
நீயோ அங்கே நானோ இங்கே
நடுவே பல்லாயிரம் மைல்கள் . . .
நமக்கான சிறு ஆறுதலோ
உன்னுள்ளே நான் என்னுள்ளே நீ . . .
நமது உலகமோ இணையத்தில்
அரட்டை, மின் அஞ்சல், வெப்காம் . . .

Saturday, February 13, 2010

சிறு சிறு எதிர்பார்ப்புகள் . . .


கொஞ்சலாய் கொஞ்ச முத்தங்கள்
கெஞ்சலாய் சில மன்றாடல்கள்
மிஞ்சலாய் சிறு முறைப்புகள் . . .

கண்களில் சின்னதாய் ஒரு சிரிப்பு
புன்னகையில் வளையும் இதழ்கள்
செல்லமாய் சின்னச் சிணுங்கல்கள் . . .

அன்பாய் ஓரிரு குறுஞ் செய்திகள்
வம்பாய் சில நிமிட கைபேசி உரையாடல்
எல்லாம் சேர்ந்த ஒரு மணிநேர அரட்டைகள் . . .

கிறுக்கலுடன் வந்திடும் வாழ்த்தட்டைகள்
தகவல் சொல்லிடும் மின் அஞ்சல்கள்
ஆசையாய் தந்திடும் வெப் காம் தரிசனங்கள் . . .

தலை சாய்த்திட திடமான ஒரு தோள்
முகம் புதைத்திட பரந்த நெஞ்சம்
தழுவிட நீண்டிடும் இரு கைகள் . . .

சோர்ந்திட்ட வேளையில் இதமான வார்த்தைகள்
கோபத்தின் போது விட்டுக் கொடுத்தல்
சுகவீனத்தை மறக்கச் சின்னதாய் ஓர் அணைப்பு . . .

Sunday, February 7, 2010

புரியாத . . . புரிந்துணர்வு . . .


நமக்குள்ளே புரிந்துணர்வு அதிகரிக்க
என்னதான் செய்ய வேண்டும் நாம்
புரியவில்லை எனக்கு எதுவும்
உனக்காவது தெரியுமா எதுவேனும் . . . ?

என்னைப் போல் நீ மாறவேண்டாம்
உன்னைப் போல் நான் மாற வேண்டாம்
ஆனால் நாம் இருவரும் ஒருவருக்கொருவர்
விட்டுக் கொடுப்பதற்கான பொதுப்புள்ளிதான் எதுவோ . . .?

எனக்குப் பிடித்ததை நீயும்
உனக்குப் பிடித்ததை நானும்
எத்தனை சதவீதம் செய்தால் போதும்
எப்படி அறிவது இதனை . . . ?

நீ செய்வது உன்னைப் பொறுத்தவரை
என் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டும்
நான் செய்வது என்னைப் பொறுத்தவரை
உன் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டும்
ஆனால் நடப்பதென்னவோ தலைகீழாவதேன் . . . ?

Thursday, February 4, 2010

உன் நினைவு . . .



உன்னைப் பற்றி சிந்தித்தாலே
என்னை அறியாமலே புன்னகைக்கிறேன் . . .

நீ செய்த செயல்கள் எல்லாம்
ஓடுகின்றன மனதில் திரைப்படமாய். . .

நீ சிரிக்கும் போது என் கோபமெல்லாம்
சூரியனைக் கண்ட பனித்துளியாய் . . .

எப்படி மாற்றினாய் இப்படி என்னை
என்னிடமே வாதாடுகிறேன் உனக்காய் . . .

உன்னோடு கைகோர்த்து நடந்த பாதைகளில்
மறுபடி நடந்து பார்க்கிறேன் நான் தனியாய் . . .

தூக்கத்தை தொலைத்தேன் உன் நினைவில்
இரவும் பகலும் தினம் கனவில் . . .

என்னோடு நீ உன்னோடு நான்
நமக்கென ஒரு உலகம் கைபேசியில் . . .