Showing posts with label கோபம். Show all posts
Showing posts with label கோபம். Show all posts

Saturday, November 13, 2010

நீயும் . . . நானும் . . .


உன்னோடான பொழுதுகள் எதற்காகவேனும்
குறைகையில் உன்னை மிக மிக
அதிகமாக பிரிந்திருப்பதாய் உணர்கிறேன் . . .
இன்னும் எப்படியெல்லாம் உன்னோடான
நேரங்களை அதிகரிக்கலாம் என்றே
கணக்கு போடுகிறது என் மனது . . .
அவை கிடைக்காத போது அந்த தவிப்பானது
கடுங் கோபமாகி விடுகிறது உன் மீதே . . .

Thursday, November 11, 2010

பேசச் சொல் . . .



உன்மேல் கோபம் கோபமாக வருகிறது
எனக்குத்தான் உன்மேல் ஏதோ கோபம்
பேசாமல் இருக்கிறேன் உன்னுடன் உனக்கென்ன . . .
நீயும் ஏன் என்னுடன் பேசாமல் இருக்கிறாய்
என்னைத் அன்பாய்த் திட்டி மிரட்டி
உன்னுடன் பேசச் சொல்லாமல் . . .

Friday, October 1, 2010

இதனாலோ . . .



கண்ணைத் திறந்தே காணும் கனவுகளும் இதனாலோ
மேலே பறப்பது போல மிதப்பதும் இதனாலோ . . .

நிறைந்த எதிர்பார்ப்பும் ஏக்கமும் இதனாலோ
உரிமை எண்ணம் கூடுவதும் இதனாலோ . . .

மற்ற உறவெல்லாம் தள்ளித் தெரிவதும் இதனாலோ
ஒருவரே உலகமாவதும் இதனாலோ . . .

கோபங்கள் கொந்தளிப்பதும் இதனாலோ
ஆசைகள் அலைபாய்வதும் இதனாலோ . . .

மௌனங்கள் பேசிடுவதும் இதனாலோ
வார்த்தைகள் வற்றிப் போவதும் இதனாலோ . . .

சுவை கூட சுவையற்றுப் போவதும் இதனாலோ
பசி கூட பறந்து போவதும் இதனாலோ . . .

இதனால் இதனால் என்றே சொல்லப்படுவதும்
இந்தக் காதல் எனப்படுவது தானோ . . .

Saturday, February 6, 2010

கோபமும் . . . அன்பும் . . .



காதலில் கோபமும் அன்பும் சந்திர சூரியர் போலும்
சூரிய ஒளியை வாங்கி இரவில் சந்திரன் ஒளிர்வது போலே
கோபமும் அதிகப்படியான அன்பின் வெளிப்பாடேயாம் . . .

அன்பு அதிகமெனின் அவர்பால் கோபமும் நிறைந்தே வரும்
காலையில் சந்திரன் மறைய சூரியன் உதிப்பது போலே
கோபத்தின் பின்னான அன்பும் அதிகமாய் வரும் . . .

Sunday, January 17, 2010

ஏனோ . . . ?


உன்னைப் பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்கும்
ஒரு சிறு செயலே போதுமானதாக இருப்பதுமேனோ. . .

உன் குரல் அலைபேசியில் கேட்டதும்
என்னுள் ஏதேதோ நடப்பதுமேனோ. . .

உன்னுடன் பகிர வரும் விடயங்களும்
நம் சந்திப்பில் மாயமாவதுமேனோ. . .

உன் கரம் கோர்த்து நடக்கும் வேளையில்
எதையும் சந்திக்கும் தைரியம் வருவதுமேனோ. . .

உன்னைக் கனவில் காண்கையில் கூட
என்னுள்ளே பட்டம் பூச்சிகள் பறப்பதுமேனோ. . .

உன் மேல் வரும் கொள்ளை ஆசையும்
ஒரு நொடியில் கடுங் கோபமாவதுமேனோ. . .

உன்னிடம் இவற்றைக் கேட்க நினைப்பதும்
பின் கேட்டகாமலே விடுவதும் வழமைதானோ. . .