Showing posts with label உன். Show all posts
Showing posts with label உன். Show all posts
Thursday, May 1, 2014
Tuesday, March 6, 2012
கை பிடித்தேன் . . .
Sunday, June 19, 2011
தூக்கமில்லா இரவுகள் . . .
Friday, March 4, 2011
நீ வருவாய் என . . .

உன்னைப் பார்க்கப் போகும்
ஏக்கம் என் கண்களில் . . .
உன்னோடான பொழுதுகளின்
நினைவலைகள் என் நெஞ்சில் . . .
உன்னோடு நடை போடுகையில்
சிறு நடுக்கம் என் கால்களில் . . .
உன்னை அணைக்கப் போகும்
ஆரவாரத்தில் என் கைகளில் . . .
உன்னை நினைக்கையில்
மெல்லிய புன்னகை என் இதழ்களில் . . .
இத்தனையும் நீ வருவாய் எனும்
என் இனிய எதிர்பார்ப்பில் . . .
Saturday, November 13, 2010
உன் வரவு . . .
Thursday, November 11, 2010
பேசச் சொல் . . .

உன்மேல் கோபம் கோபமாக வருகிறது
எனக்குத்தான் உன்மேல் ஏதோ கோபம்
பேசாமல் இருக்கிறேன் உன்னுடன் உனக்கென்ன . . .
நீயும் ஏன் என்னுடன் பேசாமல் இருக்கிறாய்
என்னைத் அன்பாய்த் திட்டி மிரட்டி
உன்னுடன் பேசச் சொல்லாமல் . . .
Saturday, March 6, 2010
புரிந்தும் . . . புரியாமலும் . . .

விளங்கவில்லை எனக்கு என்னை
உனக்குப் புரிகிறதா இல்லையாவென . . .
என்னை உனக்குப் புரியவில்லையா
இல்லை புரிந்தும் புரியாதது போல் இருகிறாயா . . .
பல நேரங்களில் சுமாராகக் கூட ஊகிக்க
முடியவில்லை என்னால் உன்னைப் பற்றி . . .
Sunday, February 28, 2010
மாறிப் போனது . . .

உனக்காய் நான் காத்திருப்பது சுகமென்றிருந்தேன்
தொடர்ந்து காத்திருந்ததில் சுகம் சுமையாகிப் போனது . . .
உன்னோடு சண்டையிடுவது தேவையென்றிருந்தேன்
அதுவே தொடர்ந்ததில் சண்டை துன்பமாகிப் போனது . . .
உன்னிடம் என் விருப்பங்களை சொல்வதின்பமென்றிருந்தேன்
அவை நிறைவேறாத போதில் விருப்பு வெறுப்பாகிப் போனது . . .
உனக்காய் விட்டுக் கொடுப்பதில் சந்தோஷமென்றிருந்தேன்
எப்போதும் விட்டதில் சந்தோசம் கரைந்தோடிப் போனது . . .
உன்னோடு வாதாடுவது ஒரு வகையில் வம்பென்றிருந்தேன்
நாள் கணக்கில் நீள்வதில் வம்பு வினையாகிப் போனது . . .
உனக்குப் பிடித்தாற் போல் இருக்க ஆசை கொண்டிருந்தேன்
உன்னால் மாறமுடியாத போது ஆசை நிராசையாகிப் போனது . . .
Thursday, February 25, 2010
உன்னால் ஏன் . . .

என் காதலை தடையின்றி கேட்கும் உன்னால்
ஏன் என் கோபத்தை ஏற்க முடியவில்லை . . .
என் சிரிப்பை மட்டும் ரசிக்கும் உன்னால்
ஏன் என் கண்ணீரை ஏற்க முடியவில்லை . . .
என் விருப்புகளை தெரிந்தும் உன்னால்
ஏன் என் வெறுப்புகளை ஏற்க முடியவில்லை . . .
என் பொறுமையை மட்டும் விரும்பும் உன்னால்
ஏன் என் திட்டுக்களை ஏற்க முடியவில்லை . . .
Sunday, February 7, 2010
புரியாத . . . புரிந்துணர்வு . . .

நமக்குள்ளே புரிந்துணர்வு அதிகரிக்க
என்னதான் செய்ய வேண்டும் நாம்
புரியவில்லை எனக்கு எதுவும்
உனக்காவது தெரியுமா எதுவேனும் . . . ?
என்னைப் போல் நீ மாறவேண்டாம்
உன்னைப் போல் நான் மாற வேண்டாம்
ஆனால் நாம் இருவரும் ஒருவருக்கொருவர்
விட்டுக் கொடுப்பதற்கான பொதுப்புள்ளிதான் எதுவோ . . .?
எனக்குப் பிடித்ததை நீயும்
உனக்குப் பிடித்ததை நானும்
எத்தனை சதவீதம் செய்தால் போதும்
எப்படி அறிவது இதனை . . . ?
நீ செய்வது உன்னைப் பொறுத்தவரை
என் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டும்
நான் செய்வது என்னைப் பொறுத்தவரை
உன் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டும்
ஆனால் நடப்பதென்னவோ தலைகீழாவதேன் . . . ?
Thursday, February 4, 2010
உன் நினைவு . . .

உன்னைப் பற்றி சிந்தித்தாலே
என்னை அறியாமலே புன்னகைக்கிறேன் . . .
நீ செய்த செயல்கள் எல்லாம்
ஓடுகின்றன மனதில் திரைப்படமாய். . .
நீ சிரிக்கும் போது என் கோபமெல்லாம்
சூரியனைக் கண்ட பனித்துளியாய் . . .
எப்படி மாற்றினாய் இப்படி என்னை
என்னிடமே வாதாடுகிறேன் உனக்காய் . . .
உன்னோடு கைகோர்த்து நடந்த பாதைகளில்
மறுபடி நடந்து பார்க்கிறேன் நான் தனியாய் . . .
தூக்கத்தை தொலைத்தேன் உன் நினைவில்
இரவும் பகலும் தினம் கனவில் . . .
என்னோடு நீ உன்னோடு நான்
நமக்கென ஒரு உலகம் கைபேசியில் . . .
Friday, January 22, 2010
கண்ட நாள் முதல் . . .

உன்னைக் கண்ட நாள் முதல்
பல்வேறு மாற்றங்கள் என்னுள்ளே . . .
கண்கள் கனவுகளில் நிறைந்து போனது
காதல் நெஞ்சில் கலந்து போனது
துக்கம் தூரமாய்ப் போனது
தூக்கம் தொலைந்து போனது
சின்னச் சின்ன தாபங்கள் வந்து போனது
சீறிச் சினப்பது சகஜமாய்ப் போனது
செல்லும் இடமெல்லாம் வெறுமையாய்ப் போனது
சேர்ந்து சுற்றப் பிரியமாய்ப் போனது
தனியே சிரிப்பது பழகிப் போனது
தானே பேசுவது வழமையாகிப் போனது
திரும்புமிடமெல்லாம் உன் விம்பம் ஓடிப் போனது
தீராத ஆசைகள் உன் மேல் கூடிப் போனது
பசியென்பதே பறந்து போனது
பார்வையெல்லாம் புதிதாய்ப் போனது
வெறுமை எல்லாம் கரைந்து போனது
வேற்றுமை எல்லாம் மறைந்து போனது
நினைவெல்லாம் உனதாகிப் போனது
நீயே எந்தன் உயிரென்றாகிப் போனது
Sunday, January 17, 2010
ஏனோ . . . ?

உன்னைப் பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்கும்
ஒரு சிறு செயலே போதுமானதாக இருப்பதுமேனோ. . .
உன் குரல் அலைபேசியில் கேட்டதும்
என்னுள் ஏதேதோ நடப்பதுமேனோ. . .
உன்னுடன் பகிர வரும் விடயங்களும்
நம் சந்திப்பில் மாயமாவதுமேனோ. . .
உன் கரம் கோர்த்து நடக்கும் வேளையில்
எதையும் சந்திக்கும் தைரியம் வருவதுமேனோ. . .
உன்னைக் கனவில் காண்கையில் கூட
என்னுள்ளே பட்டம் பூச்சிகள் பறப்பதுமேனோ. . .
உன் மேல் வரும் கொள்ளை ஆசையும்
ஒரு நொடியில் கடுங் கோபமாவதுமேனோ. . .
உன்னிடம் இவற்றைக் கேட்க நினைப்பதும்
பின் கேட்டகாமலே விடுவதும் வழமைதானோ. . .
Subscribe to:
Comments (Atom)




