
உன்னோடான பொழுதுகள் எதற்காகவேனும்
குறைகையில் உன்னை மிக மிக
அதிகமாக பிரிந்திருப்பதாய் உணர்கிறேன் . . .
இன்னும் எப்படியெல்லாம் உன்னோடான
நேரங்களை அதிகரிக்கலாம் என்றே
கணக்கு போடுகிறது என் மனது . . .
அவை கிடைக்காத போது அந்த தவிப்பானது
கடுங் கோபமாகி விடுகிறது உன் மீதே . . .