Thursday, January 14, 2010

நம் பார்வையும் . . . சுவர்களும் . . .



உன்னுடன் இல்லாத நேரங்களில்
உன்னைப் பார்க்கத் தோன்றும்
உன்னைக் கண்டதும் உன் கண்களைப் பார்க்கும்
தைரியம் ஏனோ இல்லை - என் கண்களுக்கு
இதுவரை பார்க்காதது போன்று அவை
சுற்றியுள்ள சுவர்களைச் சுற்றுகின்றன

சரி நீயாவது என்னைப் பார்க்கின்றாயா என்றால் - ஆம்!
நீ என்னைப் பார்க்கின்றாய் - நான்
உன்னை கண்களைப் பார்க்காத போது
இல்லையெனில் நீயும் பார்ப்பதென்னவோ
அதே சுவர்களைத் தான் - உன்னையும்
காட்டிக் கொடுத்து விட்டன - உன் கண்கள்
என்னுடையவற்றைப் போன்றே!

2 comments:

ரசிகன் said...

கவிதையில காதல் பொங்கி வழியிது
வாழ்த்துக்கள்

என்னுள்ளே இருந்து . . . said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரசிகன்! :-)

இதைக் கவிதை என்று சொன்னதற்கும்,
அதனுள் காதல் பொங்கி வழிகின்றது என்றதற்கும் ;-)மறுபடியும் என்னுடைய நன்றிகள் :-)