Friday, January 22, 2010

கண்ட நாள் முதல் . . .



உன்னைக் கண்ட நாள் முதல்
பல்வேறு மாற்றங்கள் என்னுள்ளே . . .

கண்கள் கனவுகளில் நிறைந்து போனது
காதல் நெஞ்சில் கலந்து போனது

துக்கம் தூரமாய்ப் போனது
தூக்கம் தொலைந்து போனது

சின்னச் சின்ன தாபங்கள் வந்து போனது
சீறிச் சினப்பது சகஜமாய்ப் போனது

செல்லும் இடமெல்லாம் வெறுமையாய்ப் போனது
சேர்ந்து சுற்றப் பிரியமாய்ப் போனது

தனியே சிரிப்பது பழகிப் போனது
தானே பேசுவது வழமையாகிப் போனது

திரும்புமிடமெல்லாம் உன் விம்பம் ஓடிப் போனது
தீராத ஆசைகள் உன் மேல் கூடிப் போனது

பசியென்பதே பறந்து போனது
பார்வையெல்லாம் புதிதாய்ப் போனது

வெறுமை எல்லாம் கரைந்து போனது
வேற்றுமை எல்லாம் மறைந்து போனது

நினைவெல்லாம் உனதாகிப் போனது
நீயே எந்தன் உயிரென்றாகிப் போனது

2 comments:

ரசிகன் said...

உங்கள் காதல் கவிதைகள் சூப்பர்.

என்னுள்ளே இருந்து . . . said...

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ரசிகன்! :-)