Sunday, February 7, 2010

புரியாத . . . புரிந்துணர்வு . . .


நமக்குள்ளே புரிந்துணர்வு அதிகரிக்க
என்னதான் செய்ய வேண்டும் நாம்
புரியவில்லை எனக்கு எதுவும்
உனக்காவது தெரியுமா எதுவேனும் . . . ?

என்னைப் போல் நீ மாறவேண்டாம்
உன்னைப் போல் நான் மாற வேண்டாம்
ஆனால் நாம் இருவரும் ஒருவருக்கொருவர்
விட்டுக் கொடுப்பதற்கான பொதுப்புள்ளிதான் எதுவோ . . .?

எனக்குப் பிடித்ததை நீயும்
உனக்குப் பிடித்ததை நானும்
எத்தனை சதவீதம் செய்தால் போதும்
எப்படி அறிவது இதனை . . . ?

நீ செய்வது உன்னைப் பொறுத்தவரை
என் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டும்
நான் செய்வது என்னைப் பொறுத்தவரை
உன் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டும்
ஆனால் நடப்பதென்னவோ தலைகீழாவதேன் . . . ?

No comments: