
மாலை மயங்கும் வேளையில்
ஒரு ஐபாட்டில் நம்மிருவர் காதுகள் . . .
பௌர்ணமி நிலா ஒளியில்
ஒரே வழியில் நடக்கும் நம் கால்கள் . . .
அடை மழை நாள் ஒன்றில்
ஒரே குடையின் கீழ் நாமிருவர் . . .
கடற்கரையில் கால் நனைக்கையில்
ஒன்றாய்க் கோர்த்த நம் கைகள் . . .
கோடை வெயிலின் வெம்மையில்
ஒரு இளநீரைப் பகிரும் நாமிருவர் . . .
மகிழ்ச்சியில் புன்னகைக்கையில்
ஒவ்வொன்றாய் விரியும் நமது இதழ்கள் . . .
நேரே சந்தித்த சந்தோஷத்தில்
ஒருங்கே திறந்து மலரும் நம் கண்கள் . . .
திரைப்படம் பார்க்கையில்
ஒன்றாய் சேர்ந்த நமது தலைகள் . . .
தொலைகாட்சி பார்க்கையில்
ஒரே இருக்கையில் நாமிருவர் . . .
கண்ணாடி முன் தலைவாருகையில்
ஒன்றாய் தெரியும் நம் விம்பங்கள் . . .
No comments:
Post a Comment