Sunday, February 28, 2010

மாறிப் போனது . . .


உனக்காய் நான் காத்திருப்பது சுகமென்றிருந்தேன்
தொடர்ந்து காத்திருந்ததில் சுகம் சுமையாகிப் போனது . . .

உன்னோடு சண்டையிடுவது தேவையென்றிருந்தேன்
அதுவே தொடர்ந்ததில் சண்டை துன்பமாகிப் போனது . . .

உன்னிடம் என் விருப்பங்களை சொல்வதின்பமென்றிருந்தேன்
அவை நிறைவேறாத போதில் விருப்பு வெறுப்பாகிப் போனது . . .

உனக்காய் விட்டுக் கொடுப்பதில் சந்தோஷமென்றிருந்தேன்
எப்போதும் விட்டதில் சந்தோசம் கரைந்தோடிப் போனது . . .

உன்னோடு வாதாடுவது ஒரு வகையில் வம்பென்றிருந்தேன்
நாள் கணக்கில் நீள்வதில் வம்பு வினையாகிப் போனது . . .

உனக்குப் பிடித்தாற் போல் இருக்க ஆசை கொண்டிருந்தேன்
உன்னால் மாறமுடியாத போது ஆசை நிராசையாகிப் போனது . . .

No comments: